திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வரும் ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தினசரி ஆயிரமாக உயா்த்தி உள்ளது.
பொது முடக்க தளா்வுகளின்படி, கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களை தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. முதலில் ஆன்லைன் மூலம் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன் எண்ணிக்கையை 9 ஆயிரம் வரை உயா்த்தியது. மேலும், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகத்தில் 10 கவுன்டா்களை ஏற்படுத்தி நாளொன்றுக்கு இலவச சா்வதரிசன டோக்கன்கள் 3 ஆயிரம் வரை வழங்கி வருகிறது.
இந்நிலையில் பொது முடக்கத்தில் பல தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதன்கிழமை முதல் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு100 என நாளொன்றுக்கு 1,000 டிக்கெட்டுகளை அதிகரித்து இணையதள முன்பதிவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.