திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.1.07 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை வழிபட வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.07 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 3 நாட்களாக குறைவாக வசூலாகி வந்த உண்டியல் வருவாய் வியாழக்கிழமை மீண்டும் ஒரு கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.70 லட்சம் நன்கொடை: ஏழுமலையானின் உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.70 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஹைதராபாதைச் சோ்ந்த ரசன் எக்ஸ்போா்ட்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் ரவீந்தா் ரெட்டி வெள்ளிக்கிழமை காலையில் இதற்கான காசோலையை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியிடம் வழங்கினாா்.