சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது இவர்களுக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 28 - ஜூன் 3) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது இவர்களுக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 28 - ஜூன் 3) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். பெற்றோர் வழியில் நன்மைகள் உண்டாகும். மனதிலிருந்த குழப்பங்கள் தொடரும். இல்லத்திற்குத் தேவையான நவீன பொருள்களை வாங்க எண்ணுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளால் மகிழ்வீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். நல்ல தரமான பொருள்களையே தேர்வு செய்து விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும். புழு, பூச்சிகளின் பாதிப்பால் விளைச்சலின் அளவு குறையும். 

அரசியல்வாதிகள் கோபப்படாமலும், பதற்றப்படாமலும் தொண்டர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களுடனான ஒற்றுமை தொடரும். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பெண்மணிகள் இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வலம் வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். மாணவ மணிகள் விளையாட்டைச் சிறிது குறைத்துக் கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம். 

பரிகாரம்: மகான்களின் தரிசனம், குல தெய்வ வழிபாடு உகந்தது. அனுகூலமான தினங்கள்: 28, 29. 
சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். பயணங்களைத் தவிர்ப்பது நலம். உடலைச் சற்று நன்கு பராமரித்துக் கொள்ளுங்கள். தகுந்த சரிவிகித உணவு, உறக்கம் போன்றவற்றை சரியாகக் கடைப்பிடியுங்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கண்டிப்பு பணி நிமித்தமாகவே இருக்கும். பண வரவு சற்று கூடும். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். போட்டிகளைச் சமாளித்து பொருள்கûளை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். கால்நடைகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு உங்களின் செயல்களை தொண்டர்களின் ஒத்துழைப்புடன் முடிப்பீர்கள். கலைத்துறையினர் சிலருக்கு வெளிநாடு செல்ல ஆயத்தமாகியும் தற்போதுள்ள சூழலில் செல்ல முடியாது. கொஞ்சம் தள்ளிப் போடுவீர்கள். 

புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் அன்யோன்யமாக நடந்து கொள்வீர்கள். தாயார் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும். மாணவ மணிகள் சீரிய முயற்சியால் தகுந்த பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து ஆனந்தமடைவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 30, 31. சந்திராஷ்டமம்: 28, 29.

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பயணங்களைத் தவிர்த்திடுங்கள். வரவும், செலவும் சமமாகவே இருக்கும். குடும்பத்தில் சிறிய மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். நாவடக்கம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியதாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு சீராக இருந்தாலும் பொறுமையுடன் சம்பாதிக்க வேண்டிய கால கட்டம் இது. வியாபாரிகளின் முதலீடுகள் அவ்வளவாக லாபம் ஈட்டாது. கடன் கொடுப்பதோ, வாங்குவதோ, ஜாமீன் கையொப்பம் இடுவதோ கூடாது. விவசாயிகள் போட்டிகளுக்குத் தகுந்தாற்போல் நடவடிக்கை எடுப்பீர்கள். மகசூலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் மீது கட்சி மேலிடத்தின் பார்வை விழும். ஆதலால், அனைத்து விஷயங்களையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செயல்படவும். கலைத்துறையினர் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு இருப்பீர்கள். வருமானத்தொய்வு உண்டாகும். 

பெண்மணிகள் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருக்கவும். அமைதியாக இருந்து காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் கல்வி கற்பதற்காக விரும்பத்தகுந்த இடத்துக்கு மாறுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீசிவ பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 01. சந்திராஷ்டமம்: 30, 31.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்களின் அந்தஸ்து உயரும். எடுத்த காரியம் சிறிது சிறிதாகவே முடியும். பொருளாதாரத்தில் சற்று சறுக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகளும் சக ஊழியர்களும், மிகவும் கரிசனமாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் கவனத்துடன் இருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். நீர் வரத்தும் மிக அதிகமாகவே இருக்கும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள். 

அரசியல்வாதிகள் உடல் சோர்வை பொருட்படுத்தாமல் கட்சிப் பணியை ஆற்றுவீர்கள். முயற்சிக்கேற்ப பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பயணங்களால் மிகவும் ஆபத்தானதொரு சூழ்நிலையைச் சந்திப்பீர்கள். எனவே தவிர்ப்பது நல்லது. 

பெண்மணிகளுக்கு பண வரவு சுமாராகவே இருக்கும். மழலையின் வரவால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ மணிகள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பதில் கவனம் செலுத்துங்கள். 

பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 29, 30. சந்திராஷ்டமம்: 01, 02, 03.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

மனதிற்கு சந்தோஷமான செய்திகள் உங்களைத் தேடி வரும். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சகோதரனுடனான உறவு சற்று மாறுபாடாகவே இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த முன் வருவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு தாமதமாகும். அலுவலக வேலைகளில் சிறிது தொய்வு ஏற்படும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறந்து வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம். தடைகளும் எதிர்ப்புகளும் விலகும். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரியுங்கள். அவைகளால் கூடுதலான வருமானமும் வரும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். 

அரசியல்வாதிகள் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவும். வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் நாவடக்கமின்மையால் சில அவமானங்களைச் சந்திக்க நேரிடும். 

பெண்மணிகளுக்கு மருத்துவச் செலவு சற்று கூடும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும். வார்த்தையில் கவனம் தேவை. மாணவ மணிகள் பெற்றோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாமல் காது கொடுத்து கேளுங்கள். பின்பு அதன் படி நடக்கவும். ஆன்மிக விஷயங்களை கவனித்து அதில் ஈடுபடுங்கள். 

பரிகாரம்: ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 29, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்களின் நெடு நாள் எண்ணம் ஈடேறும். உங்கள் பெயரும், புகழும் உயரும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். செய்யும் தொழிலில் சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கும். திட்டமிட்டு பணிகளை முடிக்க முயற்சியுங்கள். வியாபாரிகள் வரவு - செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து வியாபாரத்தில் ஈடுபடுங்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தினால் லாபமடைவீர்கள். தீவனங்களுக்காக செலவு செய்து கால் நடைகளை நன்கு கவனித்துக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் உயர் பதவி தேடிவரும் உன்னதமான காலமாகும். கட்சிப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் நாட்பட்ட செயல்கள் சிறிது தடைகளைத் தாண்டி முடிந்து விடும். 

பெண்மணிகள் பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் விளையாடும் போது கவனம் தேவை. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகவே இருக்கவும்.

பரிகாரம்: சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 30, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தைரியத்துடன் செய் தொழிலை நடத்தி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சே பேச மாட்டார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்த ஏற்பாடாகும். கூட்டாளிகளிடம் சற்று கவனமாக இருங்கள். 

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் நன்கு திட்டமிட்டு முடிக்கவும். உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் லாபத்தைக் காண்பீர்கள். புதிய வழிகளில் வியாபாரத்தைப் பெருக்க முனைவீர்கள். விவசாயிகள் வாய்க்கால், வரப்பு பிரச்னைகளை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினர் சிறு சிறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களுக்கு சற்று உதவி புரியுங்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாகவே இருக்கும். குழந்தைகளால் சில பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். மாணவமணிகள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு தேவையில்லாத பிரச்னைகளில் சிக்க நேரிடும். எனவே நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.

பரிகாரம்: சிவ பெருமானையும் நந்தி தேவரையும் வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 30, 02. 
சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரத்தில் சிறிய தொய்வு ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை முனைப்புடன் செய்யவும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். 

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இருப்பினும் வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளிலும் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகள் கால்நடைகளுக்கான பாராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புதிய குத்தகைகளையும் எடுப்பீர்கள். நீர் வரத்து கணிசமாக உள்ளதால் மகசூல் பெருகி நல்ல லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். மிகுந்த கவனத்துடன் பேசுங்கள். கலைத்துறையினர் சிறு சிறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களுக்கு உதவி புரிவீர்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் குழந்தைகளின் வரவால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். அனைவருடனும் அன்புடன் பேசி மகிழ்வீர்கள். மாணவமணிகள் வருங்காலக் கனவுகள் நிறைவேற்றுவதற்கான பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கல்வியிலும் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 01. சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இன்னல்கள் அனைத்தும் தீர்ந்து பண வரவு சுமாராக வரும். செய்தொழிலை விரிவு படுத்துவீர்கள். மறைமுக எதிரிகளிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள். சகோதரி களிடம் பாசம் மிகுந்து காணப்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் வேலைப் பளு மிகுதியாக காணப்படும். வியாபாரிகள் கூட்டாளிகளின் எண்ணப்படி செயல்பட்டால் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம். முக்கியப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்கி கொள்ளவும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். உயர் பதவிகள் தேடி வந்து சேரும். கலைத்துறையினர் பெயரும், புகழும் பெறுவதற்காக, சாதனைகளைச் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் சற்று சண்டை, சச்சரவுகள் ஏற்படும். நாவடக்கம் என்பது அவசியமான ஒன்று. மாணவமணிகள் மாணவர்களோடு சேர்ந்து கல்வி சம்பந்தமான ஆராய்ச்சியில் ஆசிரியரின் அறிவுரைக்கேற்ப ஈடுபடுவீர்கள். 
 
பரிகாரம்: சனீஸ்வர பகவானை பிரார்த்தனை 
செய்யுங்கள். அனுகூலமான தினங்கள்: 29, 03. 
சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் உயர்ந்தாலும் செலவு செய்யும் போது எச்சரிக்கை தேவை. நண்பர்களுடன் சற்று ஜாக்கிரதையாகவே பழகவும். எதிலும் பதற்றம், முன் கோபம் இல்லாமல் நிதானத்தை இழக்காமலும் செயல்படவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் படபடப்பு, சிடுசிடுப்பு சற்று குறையும். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் மறைமுக போட்டிகளையும், எதிரிகளையும் சமாளிப்பீர்கள். பணம் வசூல் செய்வதில் சற்று கறாராகவே நடந்து கொள்வீர்கள். விவசாயிகள் கடுமையாக முயற்சித்து முன்னேற நினைப்பீர்கள். மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொதுச்சேவையில் நல்ல திருப்பங்களைச் சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை சிறு சிறு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக முடித்துக் கொடுப்பீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான அன்யோன்யம் அதிகரிக்கும். சற்று மௌனம் காப்பதே நல்லது. மாணவமணிகள் சக மாணவர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் உங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை கற்றுத் தரவும். 

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கை அம்மனை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 31, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குல தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க நேரிடும். கூடுதலாக உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளில் கவனம் தேவை. பண வரவு சீராக இருக்கும். விவசாயிகள் கொள்முதலில் லாபம் தொடரும். பிற்காலத் திட்டங்களுக்காக செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு மனதளவில் சஞ்சலம் ஏற்படும். பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுங்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேம்படும். 

மாணவமணிகள் சோம்பேறித் தனத்திற்கு இடம் கொடாமல் செயல்படுங்கள். ஆரோக்கியம் மேம்படும். படிப்பிலும் பெற்றோர்களின் அறிவுரைப்படி படியுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரியை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 02, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அனைத்து செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். தனித்து செயல்படத் தொடங்குவீர்கள். பயணங்களைத் தவிர்த்திடுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் மிகுந்த தாமதம் ஏற்படும். ஊதிய உயர்வு ஏதும் வராது. வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்க முற்படுவீர்கள். வாடிக்கையாளர்களைத் தங்கள் பேச்சுத் திறமையால் கவர்வீர்கள். விவசாயிகள் அதிக செலவுகள் செய்து பயிரிடுவதைத் தவிர்க்கவும். இடைத்தரகர்களிடம் சற்று சமயோஜித புத்தியுடன் செயல்படவும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் கிடைப்பதென்பதே அரிதாகி விடும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பால் சில ஒப்பந்தங்கள் கை கூடும். 

பெண்மணிகள் கணவரிடம் அன்பு காட்டுங்கள். நீங்கள் விரும்பியபடி வாழ்க்கை வாழலாம். மாணவமணிகள் படிப்பில் மிக தீவிரமாகக் கவனம் செலுத்துங்கள். விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் கவனமாக ஈடுபடுங்கள். 

பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தாவை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 01, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com