பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10-ஆம் திருநாளான் வியாழக்கிழமை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10-ஆம் திருநாளான் வியாழக்கிழமை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா். 

அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. 

வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10-ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com