மாதவரம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் 65-ஆம் ஆண்டு நவநாள், திருப்பலி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலய பங்கு தந்தை சைமன் தலைமை வகித்தார். பிரான்சிஸ்கான் மாநில சபையின் தலைவர் பிரவீன்டிஷோசா முன்னிலை வகித்தார். இதில், புனித செபஸ்தியாரின் தேர் பவனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில், செங்குன்றம், மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, மாதவரம் துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.