மார்கழி மாத பிறப்பு: கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மார்கழி மாத பிறப்பு: கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன.14 ஆம் தேதி வரை கோயிலில் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதேபோல திருநகர் சித்தி விநாயகர் கோயில் மார்கழி மாதப்பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். 

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன.14 ஆம் தேதி வரை காலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிவரை திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com