அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு தொடக்கம்

மார்கழி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த  ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபராசக்தியம்மன் சுவாமிகள்.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த  ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபராசக்தியம்மன் சுவாமிகள்.

மார்கழி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. புலவர் சீனுவாசவரதன் தலைமையிலானோர் தினமும் திருவெம்பாவை சொற்பொழிவாற்றுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மார்கழி மாதப் பிறப்பையொட்டி, வெள்ளிக் கவச அலங்காரத்தில் உத்ஸவர் ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com