ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதில், விபூதி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன் மற்றும் நெய், பால், தயிர், பழவகைகள், கரும்புச்சாறு, இளநீர், சந்தானம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
S.K. வீடியோ 7094475552