கோவை, ஈச்சனாரியில் உள்ள அய்யா வைகுண்டர் கோயிலில் ஆனித்திருவிழா நாளைத் தொடங்குகின்றது.
ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நாளை ஆனித்திருவிழா தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை அதிகாலை கோயில் நடை திறக்கப்படும்.
ஜூலை 15-ம் தேதி உகப்படிப்பு, அருள்வாக்கு, திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகம், முறைப்பாரி எடுத்து சூரிய வாகனத்தில் ஈச்சனாரி விநாயகர் கோயில் வரை அய்யா பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜூலை 16-ம் தேதி குடும்பப்பால் வைத்து நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.