அய்யா வைகுண்டர் கோயிலில் ஆனித்திருவிழா நாளை தொடக்கம்

கோவை, ஈச்சனாரியில் உள்ள அய்யா வைகுண்டர் கோயிலில் ஆனித்திருவிழா நாளைத் தொடங்குகின்றது. 

கோவை, ஈச்சனாரியில் உள்ள அய்யா வைகுண்டர் கோயிலில் ஆனித்திருவிழா நாளைத் தொடங்குகின்றது. 

ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நாளை ஆனித்திருவிழா தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை அதிகாலை கோயில் நடை திறக்கப்படும். 

ஜூலை 15-ம் தேதி உகப்படிப்பு, அருள்வாக்கு, திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகம், முறைப்பாரி எடுத்து சூரிய வாகனத்தில் ஈச்சனாரி விநாயகர் கோயில் வரை அய்யா பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். 

ஜூலை 16-ம் தேதி குடும்பப்பால் வைத்து நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com