திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.93 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 2.93 கோடி வசூலானது.
ரூ. 43.47 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.
அதன்படி, புதன்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 22.26 லட்சம், பர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 11.11 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 10.10 லட்சம் என மொத்தம் ரூ. 43.37 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.