இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறோம். தீபாவளி அன்று நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றித் தற்போது தெரிந்துகொள்வோம்.
* ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து சீதாதேவியுடன் அயோத்தி திரும்பினார்.
* மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார்.
* குபேரன் சிவபெருமானை வழிபட்டுப் பல பொக்கிஷங்களைப் பெற்றார்.
* காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடைசூழ காட்சி தந்தார்.
* விக்கிரமாதித்த மன்னன் முடிசூடிக் கொண்டார்.
* கேதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவபெருமானின் உடம்பில் பாதியை பெற்றார்.
* மகாபலி மன்னன் அரியணை ஏறினார்.
* மகாவீரர் முக்தியடைந்தார்.
* சீக்கிய குருவான குருநானக் முக்தியடைந்தார்.
* ஆதிசங்கரர் ஞான பீடங்களை ஸ்தாபித்தார்.
* சுவாமி ராமதீர்த்தர் தீபாவளியன்று பிறந்து, தீபாவளியன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளியன்றே சமாதி அடைந்தார்.