கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோயிலில் ஜன.27-ல் கும்பாபிஷேகம்

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் வெங்கடாசலபதி..
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோயிலில் ஜன.27-ல் கும்பாபிஷேகம்

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜன. 27-ல் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இக்கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் கேந்திர நிர்வாகம் நன்கொடையாக வழங்கிய 5.50 ஏக்கர் நிலத்தில் ரூ.22.50 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதி சன்னிதி, பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னிதிகளும், கருட பகவான் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், தேரோட்டம், தெப்பத் திருவிழா போன்ற அனைத்து விழாக்களும், அதே நாளில் அதே நேரத்தில் இங்கு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கோயில், கடற்கரையின் மிக அருகே அமைவது மிகவும் சிறப்பானதாகும்.

மேலும், இக்கோயிலில் பிரமோற்சவம் நடைபெறும் நாளன்று வெங்கடாசலபதி சுவாமி பாதத்தில் சூரிய ஒளி விழும் விதத்தில் கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜன. 27-ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com