திருப்பதிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

ஏழுமலையானின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 1 கோடியே, 11 லட்சத்து, 11 ஆயிரத்து, 111 ரூபாயை
திருப்பதிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

ஏழுமலையானின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 1 கோடியே, 11 லட்சத்து, 11 ஆயிரத்து, 111 ரூபாயை நன்கொடையாக வழங்கியது.

இதற்கான வரைவோலையை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பிரசாத் திங்கள்கிழமை காலை ஏழுமலையான் தரிசனத்திற்கு பின் தேவஸ்தான இணை அதிகாரி ஹரிஹேந்திரநாத்திடம் வழங்கினார்.

ரூ.10 லட்சம் நன்கொடை

ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், ஸ்ரீ சீனிவாச சங்கர நேத்ராலயா அறக்கட்டளைக்கு  ரூ.1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கல்விதானம் அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், வேதப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com