செப்டம்பர் மாதப்படி யோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்?

12 ராசிக்காரர்களுக்குமான செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்..
செப்டம்பர் மாதப்படி யோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்?

12 ராசிக்காரர்களுக்குமான செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பஞ்சமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். உணர்ச்சி வசப் பட்டு பேசுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் சரியாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையப் பெறுவீர்கள்.  பல வருடங்களுக்கு முன்பு சந்தித்த உற்றாட், உறவினர்களை இப்போது சந்திப்பீர்கள். பழைய கடன்களை அடைக்க இப்போது வழி பிறக்கும். சாமர்த்திய சாலி என்று அனைவரும் ஒப்புக் கொள்ளும்படி நடந்து கொள்வீர்கள்.

தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணம் ஒன்றை ஏற்க வேண்டியிருக்கும். நடக்கும் தொழிலைப் பொறுத்தவரை நல்லபடியாக அமையும்.  வீண் அலைச்சல் அவ்வப்போது அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும். அதனால் மனம் ஓரளவிற்கு நிம்மதி அடையும்

உத்தியோகஸ்தர்கள் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். வேலைக்குச் சென்று வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் நிம்மதியாக இருப்பீர்கள்.

அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. 

கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். எதிலும் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுங்கள். இறைவனை வழிபடுங்கள்.

மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அஸ்வினி:
இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். 

பரணி:
இந்த மாதம் எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம். 

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்த வந்த காரியத்தடை அகலும். நண்பர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு -  புதன்
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பூ மாலை சூடி வணங்க மனக்கஷ்டங்கள் தீரும்.

{pagination-pagination}
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சுகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் திருமண முயற்சிகளை சற்று தள்ளிபோட வேண்டி வரலாம். நல்ல யோகமான செய்திகளை கேட்க வேண்டி வரும். பிள்ளைகள் நலனுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அவர்கள் மனதில் உள்ளவற்றை  மனம் விட்டு பேச விடுங்கள். வெகுதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் நயமாக பேசுவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும். ஓய்வெடுக்கும் தருணங்களில் ஓய்வெடுக்கலாம். ஏனெனில் உடம்பில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய நபர்களில் நட்பு கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை இப்போது எடுப்பது நல்லது. உங்களுக்கு சாதகமாக உங்கள் மேலதிகாரி நடந்து கொள்வார். வழக்கத்தை விட சற்று அதிகமாக உழைத்து பாராட்டை பெறுவீகள். தீடீரென்று எதிர்பாராத செலவு வரும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான மாதமாக இருந்தாலும் பற்பல சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் அனுசரனையாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறிகள் நீங்கும். வாய்ப்புகள்   குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகள் சென்று வருவீர்கள். 

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். 

பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனித்து வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் வாகனம் ஓட்டிச் செல்வதை தவிர்த்திடுங்கள். சிறு விபத்துகள் நேரலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். 

ரோகிணி:
இந்த மாதம்  எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாய் அமையும். 

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் சிலருக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படலாம். உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். 

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - சனி
பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று அரளி பூ மாலை சாற்றி வணங்க நன்மை நடக்கும்.

{pagination-pagination}

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் தைரியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து செல்லும். அதனை ஆலோசனைக்கு உட்படுத்தி பெரிய விஷயமாக்காதீர்கள். அதுவே சரியாகிவிடும். நீங்கள் சொன்ன கருத்தினால் பிரச்சனை என்று வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் பேசவும். பெரியவர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளை சரியாக கவனிப்பது நல்லது. அவர்களின் முன்னேற்றத்தில்  சற்று கவனம் செலுத்தவும்.

தொழில் - வியாபாரம் லாபகரமாக இருக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறிது கவனம் செலுத்தினால் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். முயற்சி செய்யுங்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த இடமாற்றம் கிடைக்கும். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக சில சலுகைகள் கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 

கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். 

பெண்கள் குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக மனதில் இருந்த சந்தேகங்கள் தீரும். நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உடன் பண்புரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தை சந்திக்கலாம். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கும். 

திருவாதிரை:
இந்த மாதம் செய்யும் வேலையில் உங்கள் தனித் தன்மை வெளிப்படும். காரியங்களை செம்மையாக முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். 

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில்,  வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். 

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - வெள்ளி
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர பிரச்சனைகள் தீரும்.


{pagination-pagination}
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) 

கிரகநிலை:
ராசியில் ராஹூ - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் தனாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கடக ராசி அன்பர்களே,
குடும்பத்தில் நல்லதோர் விசங்களுக்காக அனைவரும் ஒன்றாக பேசி கலந்து ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். அனைவரின் கருத்தும் ஒற்றுமையாக இருக்கும். திருமண வயதில் உள்ளோருக்கு வரன் பார்க்கும் படலமும் நடைபெறும். மாமியார் - மருமகள் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீருவதால் அனைவரும் ஒன்றாக இணைந்து குல தெய்வ பிரார்த்தனையை முடித்து வாருங்கள்.

தொழிலில்  கொடுக்கல் -வாங்கலில் சிறு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். புதிய தொழிலுக்கு தேவையான அடிக்கல் நாட்டுவீர்கள். மற்றபடி லாபம் அதிகமாகத் தான் இருக்கும். யாரிடமும் நம்பி வேலைகளை கொடுக்காமல் உங்கள் கண்  பார்வையிலேயே கவனியுங்கள்.

உத்தியோகத்தில் தாங்கள்  மேற்கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்படக் கூடும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்களும் ஏற்படுவதற்கு  வாய்ப்புண்டு. 
அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 

பெண்கள் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அவ்வப்போது ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் எதிலும் பொறுப்பாக நடந்து கொள்வது அவசியம். புத்தி சாதுர்யம் உங்களுக்கு வெளிப்படும்.

புனர் பூசம் 4ம் பாதம்: 
இந்த மாதம் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.பெண்கள் சுபச் செலவு உங்களால் ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். 

பூசம்:
இந்த மாதம் பொதுநல சேவை செய்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆகையால் பாராட்டு, புகழ் கிடைக்கும். உணவு, பழக்க வழக்கங்களை ஒழுங்கு படுத்தி அதனால் வரும் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். 

ஆயில்யம்:
இந்த மாதம் முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் பொருளாதாரரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வில்வம் அர்ப்பணித்து வர மனம் ஒருநிலைப்படும்.

{pagination-pagination}
சிம்மம்: (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் ராசியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் சிம்ம ராசி அன்பர்களே, குடும்பம் பொறுத்தவரை சில முக்கிய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. முன்னோர்கள் வழிபாடு செய்வீர்கள். வாழ்க்கைத் துணையின் உடன்பிறப்பால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலனில் சிறிது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக சிலர் பரிந்து பேசுவார்கள். தற்போதைய சூழலிருந்து முன்னேற்றம் உண்டாக அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

தொழில் தொடர்பான மந்தநிலை மாறுவதற்கு சூழ்நிலைகள் சாதகமாக உள்ளது. தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். செலவுகளும் அதிகரிப்பதால் சில சிக்கல்கள் வரக்கூடும். ஆனால் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வேலையை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் அதைக்கண்டு வியந்து பாராட்டுவார்கள். வேலைக்குச் செல்லும் போது வாகனத்தில் கவனமாக செல்லவும். தலைக்கவசம் அணிந்து செல்லவும்.

அரசியல் துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள் செலவு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கவும். ஆடம்பரச் செலவுகள் செய்ய வேண்டாம்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டி வரலாம்.

மகம்:
இந்த மாதம் பிறமொழி, இனத்தவரின் ஆதரவு, ஒத்துழைப்பு உங்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.அரசியல்வாதிகள் பொது நல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். 

பூரம்:
இந்த மாதம் நல்லோர் ஆதரவு கிடைக்கப் பெற்று நற் காரியங்களில் ஈடுபட்டு அதனால் சில காரியங்கள் வெற்றி அடையலாம். சக நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல் அனுசரனையாக இருப்பதும் தான் உங்களுடைய வெற்றிக்கு வடிகோலாக அமையும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம்  இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - சனி
பரிகாரம்: மஹாலட்சுமிக்கு மல்லிகை அர்ப்பணித்து வணங்க பணக்கஷ்டங்கள் தீரும்.

{pagination-pagination}
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் விரையாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் தாங்கள் அன்றாடம் செய்து வரும் பணிகளில் எந்த தொய்வும் இருக்காது. வெளியிடங்களுக்கோ அல்லது வெளியூர் பயணத்தின் போதோ தங்கள் உடைமைகளை மற்றும் பணத்தை  கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தடைகளை களைந்து சாதிக்க வேண்டி வரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் அதை சற்று தள்ளிப்போடவும். கூடிய வரை வீண் விவாதங்களில் தடையிடாமல் இருப்பது நல்லது.

தொழிலைப் பொறுத்தவரை இப்போதைக்கு கடன்கள் வாங்காமல் சமாளிப்பது  நன்மையைத் தரும். எதிலும் நம்பிக்கையையும் , மன உறுதியையும் மட்டுமே நம்பி வியாபாரத்தை செய்து வாருங்கள். உங்கள் மன உறுதி உங்களை காப்பாற்றும். 

உத்தியோகத்தில் முயற்சிகளைச் செய்து வாருங்கள். திறம்படச் செய்து முடிக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலக வேலை காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். அதனால் வயிற்று உபாதைகள் வரலாம். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு   சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும்.  கட்சி மேலிடத்திற்குத் தகவல்   அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன்  போட வேண்டாம்.   

கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.  புதிய   நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள் உயரும். 

பெண்களுக்கு சில மன உளைச்சல்கள் வரலாம். உங்கள் பிரச்சினைய  யாரிடமாவது மனம் விட்டு பேச ஆசைப்படுவீர்கள். 

மாணவர்கள் விளையாட்டுகள், மற்றும்  போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டாம். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். 

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் போடும் திட்டம் உங்களுக்கு இடையூறாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். 

அஸ்தம்:
இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். 

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் இறையருளும், நம்பிக்கையும் கூடும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். 

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருவை வணங்க காரியத்தடை நீங்கும்.

{pagination-pagination}

துலாம்(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் லாபாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் துலாம் ராசி அன்பர்களே,
குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவி யாராவது ஒருவரது வேலையின் காரணமாக பிரிந்திருக்க நேரலாம். குடும்பத்தின் ஒற்றுமையை காக்க ஒருவருக்கொடுவர் விட்டுக்கொடுத்து செல்வது மிக முக்கியம். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரலாம். புதிய வாகனம் வாங்க வேண்டிய எண்ணமிருப்பின் அது இப்பொழுது நிறை வேறும். எதிலும் பொறுமை, நிதானம் அவசியம்.

தொழிலுக்காக கடன் வாங்க வேண்டாம். பழைய கடன்கள் இருப்பின் அவை இப்பொழுது அடைபடுவதற்குச் சாத்தியக் கூறு உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் மேற்கொண்டு கடன் வாங்க வேண்டாம். சிறு வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். 

உத்தியோகத்தில் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி வரலாம். பணப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மற்றவர்களின் பழி சொல்லுக்கு ஆளாக நேரிடும். தங்கு தடையின்றி வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச்  செய்வீர்கள்.  எதிரிகளால்   கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக்  காப்பாற்றிக்   கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே    கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள்.  மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச்   செய்யவும்.  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். 

பெண்கள் வேலை பார்த்து வரும் அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. எதிலும் பொறுமை நிதானம் தேவை.

மாணவச் செல்வங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். படிப்பில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும். 

சுவாதி:
இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில்  மனநிம்மதி உண்டாகலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,24
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன்
பரிகாரம்: சனி பகவானுக்கு விளக்கேற்றி வணங்க மனம் தெளிவடையும்.

{pagination-pagination}

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் தொழில் அதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் விருச்சிக ராசி அன்பர்களே,
குடும்ப உறுப்பினர்கள் தாயாரின் உடல்நிலையில் அதிக அக்கறை செலுத்துங்கள். எத்தருணத்திலும் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவோ பிறருக்கு உதவுவதோ வேண்டாம். நெருங்கிய உறவினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். உடல் அசதியால் காய்ச்சல் போன்ற உடல்நோய் வந்து போகலாம். அது உடனே சரியாகும் கவலை வேண்டாம்.

தொழில் விவகாரங்களில் விற்பனையும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். வியாபார ரீதியான பயணங்கள் இப்போது ஏற்படக்கூடும். கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த பிர்ச்சினைகள் தீரும். மனநிம்மதி ஏற்படும்.

உத்தியோகத்தில் சிலர் முக்கியப் பதவியில் அமர்வதற்கு சிறந்த வாய்ப்புள்ளது. உங்கள் புத்தி சாதுர்யத்திற்கு கிடைத்த பரிசாக இருக்கும். மேலும் சிலருக்கு சிறப்பு சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும்  உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப்   பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொண்டர்களின்  எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உட்கட்சிப் பூசலில்   சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வீர்கள். 

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை  முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில்   கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை  முழுமையாகப்   பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். 
பெண்கள் சிலர் ஆன்மீக சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளியூர் சென்று வரவும் வாய்ப்பு உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
மாணவர்கள் வெளியூர் சென்று தொழிற்சாலை பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். 

அனுஷம்:
இந்த மாதம் பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். 

கேட்டை:
இந்த மாதம் பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். யாருடனும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி
பரிகாரம்: அம்பாள் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வணங்க தைரியம் அதிகரிக்கும்.

{pagination-pagination}

தனுசு: (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பாக்கியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. திருமண முயற்சிகளில் தொய்வு காணப்பட்டாலும் நீங்கள் பிரயத்தனப்பட்டால் வெற்றி நிச்சயம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். கவனம் தேவை.

தொழில் - வியாபாரிகளுக்கு பணப் பிரச்சனைகள் தீரும். கூட்டாளிகளுடன் இருந்து வந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். வெளிப்படையாக கலந்து ஆலோசிப்பதன் மூலம் அவற்றை சரி செய்து கொள்ளலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். சிலர் உயர் அதிகார்களின் பொறுப்புகளை ஏற்று செய்ய வேண்டி இருக்கும். இதனால் உங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும், கவனத்துடனும்  செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில்   உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன  வருத்தத்துக்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். மற்றபடி   தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.  பயணங்களால் நன்மை உண்டாகும். 

கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக்   காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு  பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கலைஞர்கள், நண்பர்கள் ஆவார்கள். புதிய   சொத்துக்களை வாங்குவீர்கள். 

பெண்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். அதனால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் சிறந்து விளங்குவீர்கள்.

மூலம்:
இந்த மாதம் எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள். உடனிருப்போரால் பிரச்சனை தோன்றி மறையலாம். 

பூராடம்:
இந்த மாதம் சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும். அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல் படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும். 

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்
பரிகாரம்: முருகன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

{pagination-pagination}
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் (வ), கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் அஷ்டமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேற்றுமைகள் மாறி சந்தோஷம் நிலவும். எனினும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்திற்குத் தேவையான ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

தொழில் - வியாபாரத்தில் முன்னேற்றம் எதிர்பார்த்ததைவிட இருக்கும். பெண் தொழிலாளர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு தேவையான வேலை சூழலைச் செய்து கொடுப்பதன் மூலம் உங்கள் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு சில மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் நீங்கள் குழம்பாமல் சிறிது யோசித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். 
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான  திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி   மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம்  அடங்கி நடப்பார்கள்.   மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

கலைத்துறையினர் சிறப்பான புதிய  ஒப்பந்தங்களைப்   பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப்    பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். 

பெண்களுக்கு கணவனுடனான சண்டைகள் மறைந்து சுமூகமாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கவனம் சிதறாமல் பாடங்களைப் படித்து சிறந்து விளங்குவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் தூர தேசப் பிரயாணம் ஏற்படும் ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். 

திருவோணம்:
இந்த மாதம் தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு, புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும், இப்பொழுது துவங்கலாம். 

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்து போவதினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன்
பரிகாரம்: சிவன், பார்வதி ஆலயத்திற்குச் சென்று வர வீண் அலைச்சல் குறையும்.

{pagination-pagination}

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் களத்திராதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் பெண்களின் பேச்சால் நன்மைகள் ஏற்படும். திருமணம் கைகூடும். நீண்ட நாள் காத்திருந்த பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு கிடைக்கும். உங்கள் பேச்சைக் கேட்டு அனைவரும் சில காரியங்களைச் செய்வார்கள்.

தொழில் -  வியாபாரம் உங்கள் உடல் நலத்தால் முடங்க வாய்ப்பு இருப்பதால், உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்வது அவசியமாகிறது. வார்த்தைகளைக் கோர்த்துப் போட்டு பேசவும். தெரியாமல் வாக்கு கொடுக்க வேண்டாம். 

உத்தியோகத்தில் மேலிடத்தின் ஆதரவு உங்களுக்கு தான். அதனால் ஏதாவது பதவி உயர்வு பற்றிய கவலை இருந்தால் அதை விட்டொழியுங்கள். உங்களை அனைவருமே முன்மொழிந்து பரிந்துரை செய்யும் அளவிற்கு உங்களுக்கு சாதகம் தான். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில்   மதிப்பு, மரியாதை  உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில்   ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில்  மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி   கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க  முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும். 

கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக   கலைஞர்களில்  நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி,   பொறாமைகள் குறையும். 

பெண்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.

மாணவ மணிகளுக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மிகப்பிரகாசமான வழியை அமைக்க ஆசிரியர்கள் உதவுவார்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் தீவிர முயற்சிகளின் பேரில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலத்தால் சிக்கலில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு அனுகூலம் இல்லாமல் இருக்கலாம். 

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் தலை தூக்கலாம். 

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - வெள்ளி
பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்குச் சென்று துளசி சாற்றி வழிபட பணப்பிரச்சனைகள் குறையும்.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் ரண ருண ரோகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மீன ராசி அன்பர்களே,
குடும்பத்திற்காக ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். பிரச்சினைகளை குடும்பத்தாரின் காதிற்கு கொண்டு செல்ல மாட்டீர்கள். மூத்த சகோதரி அல்லது சகோதரர்களால் இருந்து வந்த மனக் கசப்பு குறையும். உங்களை தானே மனம் வந்து இல்லத்திற்கு அழைப்பார்கள். நீங்களும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை என்ற பெயரில் அவர்களை மிகவும் வெறுமைப் படுத்த வேண்டாம்.

தொழில் சார்ந்த கடன்களை அடைக்க  முடியும். தாமதமாக நடந்தாலும் சிறப்பான பலன்களை சில காரியங்களில் பெறுவீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பொருட்கள் தாமதமாக வருவதற்கான சூழலும் உள்ளது. எனினும் கவலை வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். நிலுவையில் இருந்த பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். தொழிலுக்காக புதிய இடம் வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். 

கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

பெண்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டிற்குத் தேவையானதை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களின் அறிவுத் திறமை வெளிப்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்வீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தெய்வ அனுகூலத்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். அதீத உழைப்பின் மூலம் வெற்றிகள் கிடைக்கும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் சாதகமாக இருக்கும். அதனால் சிலருக்கு கடன்கள் வரலாம்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் உறவினர்கள் முறையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும். பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதையும் காண்பீர்கள். 

ரேவதி:
இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு, போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். 

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய்
பரிகாரம்: விஷ்ணுவிற்கு தாமரை மலரை அர்ப்பணித்து வர உடல் உபாதைகள் குறையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com