திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
இதையொட்டி, எட்டாம் நாள் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயிலை அடைந்தார்.
திருவிழாவின் சிகர விழாவான தேரோட்டம் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடையும். தேரோட்டத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.