கும்பகோணம், மேலக்காவேரி பிரும்மேஷ்டிபுர அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு பிரஹன்நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு பிரகார மண்டபத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் மங்கல பிரித்தியங்கிரா தேவிக்கு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் நிகும்பலா (குங்குமம் மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் கொண்டு) சிறப்பு யாகமும் அதைத் தொடர்ந்து மங்கல பிரித்தியங்கிரா தேவிக்கு பல விதமான அபிஷேகங்களுடன் கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், தூப- தீபஆராதனைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மங்கல பிரித்தியங்கிரா தேவி பக்தர்கள் இணைந்து மிகச் சிறப்பாக செய்து இருந்தார்கள்.
- ப.சரவணன், குடந்தை