சென்னை, திருநீர்மலை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் 751-வது வார்ஷிக திருநக்ஷத்ர மஹோத்ஸவம் நடைபெறுகிறது.
ஸ்ரீ விளம்பி வருஷம் புரட்டாசி 5-ம் தேதி(21.09.2018) வெள்ளிக்கிழமை ச்ரவண நக்ஷத்திரத்தன்று திருமங்கையாழ்வாராலும், பூதத்தாழ்வாராலும் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி தேசிகளின் 751-வது வார்ஷிக திருநக்ஷத்ர மஹோத்ஸவம் நடைபெறுகிறது.
ஸ்ரீமத் பரம ஹம்சேத்யாதி ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹாதேசிகள் அனுக்ரஹத்தைப் ப்ரார்த்தித்து நடைபெறுவதால் ஆச்ரம சிஷ்யர்களும், அபிமானிகளும், பக்தர்களும் கலந்துகொண்டு ஆசார்ய அனுக்ரஹத்திற்குப் பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கின்றேன்.
தகவல் - எஸ்.வெங்கட்ராமன்