மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 70 கிலோ தங்கம் உள்ளிட்ட நகைகள் பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கௌட் சரஸ்வத் பிரம்மன் என்ற குழு, கடந்த 64 வருடங்களாகப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 70 கிலோ தங்கள் மற்றும் 350 கிலோ வெள்ளியைக் கொண்டு ஆபரணங்களைச் செய்து விநாயகர் சிலைக்கு அணிவித்துள்ளது.
இந்த நகைகளுக்காகவே 264.75 கோடி ரூபாய்க்கு விநாயகர் சிலை காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியில் இருந்து ஐந்து நாட்களுக்கு மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி 65 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மதிப்புமிக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.