செய்திகள்
வீரராகவர் கோயில் பக்தர்கள் தரிசனம்
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.
இக்கோயிலில் சனிக்கிழமை அதிகாலை வீரராகவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து, வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.