இந்த வாரம் யோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்.28 - அக்.4) பலன்களைத் துல்லியமாக
இந்த வாரம் யோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 28 - அக்டோபர் 4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன் பெறுவோம்.

மேஷம்

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம்)

வேலைகளை எப்பாடு பட்டேனும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்படைவீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். விரயங்கள் உண்டாகலாம்.  

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.  உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகள் முயற்சிக்கேற்ற பதவி உயர்வைப் பெறுவீர்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாது கட்சிப் பணியாற்றி பெயர் பெறுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து பாராட்டு பெறும். பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும்.  

மாணவமணிகளுக்கு கல்வியிலும் விளையாட்டிலும் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்கள் சொற்படி நடந்து கொள்வீர்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப் பெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  28, 29.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம்

(கார்த்திகை 2-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம்)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எடுத்த காரியங்களை துணிச்சலுடன் சாதித்துக் காட்டுவீர்கள். நல்லோரின் தொடர்பு ஏற்படும். பயணங்களாலும் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் அந்நியரிடம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணம் வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். தடைகளைக் கடந்து திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகளின் சொல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கட்சி மேலிடத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு செலவுகளும் ஏற்படும்.

பெண்மணிகளுக்கு கணவரிடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளுக்கு செலவு செய்ய நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் தலைத்தூக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.{pagination-pagination}

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம்)

நிதானமாக செயல்படவும். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோர் உடல்நலம் நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சேமிப்பு உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். வர்த்தகர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் புதிய யுக்தியுடன் செய்து முடிப்பீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் வருமானம் நன்றாக இருப்பதால் ஆரம்பர செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உறவினர்களிடம் ஒற்றுமை நிலவும். அந்தஸ்தும்  உயரும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்க வேண்டிவரும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  29, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம்

(புனர்பூசம்4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சிலர் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். உங்கள் பேச்சு மற்றும் செயல்களில் ஒரு மிடுக்கு தோன்றும். பயணங்களால் பலன் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் வாங்க வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். விளைச்சலைப் பெருக்க முயற்சிக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். முக்கியப் பிரச்னைகளில் தலையிட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பயணங்களின்போது கவனம் தேவை. 

பெண்மணிகள் ஆடை ஆபரணங்கள் வாங்கும் ஆசையை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவமணிகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  28, 1.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம்)

நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சேமிப்பில் கவனம் தேவை. யாருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் புரிந்துக்கொண்டு செய்து முடிக்கவும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடிப்பீர்கள்.  இதனால் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை ஏற்பீர்கள்.கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும்.  ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். 

பெண்மணிகள் பிறர் பேச்சை யோசிக்காமல் நம்ப வேண்டாம். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறலாம்.

பரிகாரம்: திங்கள்கிழமையில் விநாயகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி

(உத்திரம் 2-ம் பாதம், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம்)

பொருளாதார நிலைமை சீர்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் புதிய சொத்துகளை வாங்க முயற்சி தேவை. சிலர் புதிய வீட்டிற்கு குடிபோகும் காலமிது. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் தடைகளை சமாளிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் உஷாராக இருக்கவும். செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். எதிலும் உறுதியுடன் செயல்படுவீர்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். 
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவீர்கள். ஆனாலும் மனதில் அமைதி குறையும். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோரின் ஆதரவும் அனுசரணையும் ஏற்படும். 

பரிகாரம்: பெருமாள்} தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 2.

சந்திராஷ்டமம்: 28.

{pagination-pagination}
துலாம்

(சித்திரை 3-ம் பாதம், சுவாதி, விசாகம் 3-ம் பாதம்)

திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடிப்பீர்கள். பொருளாதாரம் பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். செல்வாக்கும் வாழ்க்கைத் தரமும் உயரும். வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்தவும். 

அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் கவனம் தேவை. கலைத்துறையினர் பல புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான காலமிது. 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்து கல்வியில் முன்னேறுவீர்கள். நெடுநாளைய கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும், ஸ்ரீ ராமபிரானையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  2, 3. 

சந்திராஷ்டமம்: 29, 30,1.

{pagination-pagination}
விருச்சிகம்

(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

பொறுமையுடன் செயல்களைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தொழிலில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் வரும். பெற்றோர் வழியில் சோதனைகள் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்கள் மனக்குழப்பத்தை தவிர்க்கவும். சக ஊழியர்கள் உதவமாட்டார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறையை கையாளவும். எவருக்கும் கடன்தர வேண்டாம். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். மகசூல் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டாகும். 

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறைந்தாலும் திறமைகள் குறையாது. 

பெண்மணிகளுக்கு குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் சுமுகமாக இருக்கமாட்டார்கள். பேசும்போது நிதானம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்டகாலத் திட்டங்களுக்கு இது உகந்த காலம்.

பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 4. 

சந்திராஷ்டமம்: 2, 3.

{pagination-pagination}

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம்)

வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் ஏற்படாது. குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்கள், நண்பர்கள் அனுசரணையாக இருக்கமாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை புரிந்து கொண்டு கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்கள் திருப்திகரமாக முடியும். போட்டியாளர்களின் சதியை சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு வயல் வரப்பு சண்டைகளில் தீர்வு கிடைக்கும். கால்நடைகளால் பலன் உண்டாகும். 

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் கவனமாக இருக்கவும். எவரையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். செல்வாக்கு உயரும். மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் குறையும். ஆனாலும் முயற்சியைக் கைவிட மாட்டீர்கள். படிப்பில் தியானம், யோகா போன்றவற்றிலும் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: தினமும் 108 முறை "ஸ்ரீ ராம ஜெயம்' எழுதி வரவும்.

அனுகூலமான தினங்கள்:  2, 3. 

சந்திராஷ்டமம்:  4.

{pagination-pagination}

மகரம்

(உத்திராடம் 2-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம்)

உங்கள் திறமைகள் பளிச்சிடும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் தனித்து முடிவெடுப்பீர்கள். உடன்பிறந்தோர் ஆதரவுக்கரம் நீட்டுவர். இழந்த மரியாதை மீண்டும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயிகள் புதிய பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கட்சி மேலிடத்திடம் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். வீட்டுக்குப் புதிய பொருள்கள் வாங்குவீர்கள். மாணவமணிகள் கூடுதல் மதிப்பெண்கள் பெற கடின உழைப்பு தேவை.

பரிகாரம்: காலபைரவரை வணங்கிவர அனுகூலம் கூடும். 

அனுகூலமான தினங்கள்:  28, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம்

(அவிட்டம் 3-ம் பாதம், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம்)

அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும்.  மனதில் ஏற்படும் பயமும் கவலைகளும் வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். வார இறுதியில் இத்தகைய நிலைமை மாறுபடும். ஆன்மிக சிந்தனைகளால் உற்சாகம் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு கடன் குறையும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் நிறைய உண்டாகும். மேலும் முன்னேற விவசாய உபகரணங்களை வாங்க எண்ணுவீர்கள்.

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். வேலைகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உண்டு. கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் வாங்கும் காலமிது. மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் வெற்றி காண்பீர்கள். விரும்பிய   பாடப்பிரிவுகள் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி நற்பலன்களைப் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம்

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

பொருளாதார நிலைமை உற்சாகம் தரும் விதமாக அமையும். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் பலம் குறையும். புனிதப் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். மேலதிகாரிகள் மூலம் சிறு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகவே இருக்கும். மாற்று பயிர்களை பயிரிட்டு விளைச்சலைப் பெருக்கிக் கொள்ளவும். 

அரசியல்வாதிகள் சிக்கலான சூழ்நிலையை சமாளிப்பீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 
பெண்மணிகளுக்கு உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடப்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் ஈடுபாடு செலுத்துவீர்கள். விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றியடைவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் துர்க்கையை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்:  1, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com