தன்வந்திரி பீடத்தில் மகோற்சவம்: தமிழக ஆளுநர் இன்று பங்கேற்பு

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நிறுவனர் முரளிதர சுவாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மகோற்சவம்-2019 என்ற முப்பெரும் விழா சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது. 
தன்வந்திரி பீடத்தில் மகோற்சவம்: தமிழக ஆளுநர் இன்று பங்கேற்பு
Published on
Updated on
1 min read

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நிறுவனர் முரளிதர சுவாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மகோற்சவம்-2019 என்ற முப்பெரும் விழா சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது. 
இதில் 1,000 தவில் மற்றும் நாகஸ்வரக் கலைஞர்களின் நாதசங்கமம், சஹஸ்ர (ஆயிரம்) கலசாபிஷேகம், சோடஷ (பதினாறு) திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன. 
இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் பங்கேற்று 1,000 தவில் மற்றும் நாகஸ்வரக் கலைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com