ஏப்ரல் மாத எண்கணிதப்படி எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எதையுமே ஒரு தொலைநோக்கு பார்வையாலே பார்க்கும் மனதுடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும்.
புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினர் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும்.
அரசியல்துறையினர் புதிய விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடலநலனைப் பொறுத்தவரை நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்த்தல் நலம்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு எலுமிச்சை சாறு கொடுக்கவும்.
{pagination-pagination}
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
குடும்பத்தின் மேல் நிறைய அன்பு வைத்து இருக்கும் இரண்டாம் எண் அன்பர்களே நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம்.
பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்துறையினர் சக நண்பர்களிடம் நட்புடன் நடந்து கொள்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமையன்று அம்மனை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.
{pagination-pagination}
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அனைவரையும் வேறுபாடு இல்லாமல் பார்க்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதத்தில் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும்.
அரசியல்துறையினருக்கு மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலில் சென்று தக்ஷிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
{pagination-pagination}
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எதையும் ஒரு முறை சொன்னால் எளிதில் புரிந்துகொள்ளும் அறிவு கொண்ட நான்காம் எண் அன்பர்களே நீங்கள் விடா முயற்சியுடைவர். இந்த மாதத்தில் பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும்.
தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். அரசியல்துறயினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த இடைவெளி குறையும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.
{pagination-pagination}
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
கோபத்தால் எதையும் சாதிக்கமுடியாது என்று எண்ணும் ஐந்தாம் எண் அன்பர்களே நீங்கள் நேர்மையை தாரக மந்திரமாகக் கொண்டவர்கள். நீங்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவர். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது.
காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
கலைத்துறயினருக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.
பரிகாரம்: புதன் அன்று பெருமாளுக்கு துளசி மாலை அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
{pagination-pagination}
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தோல்வியையும் வெற்றியையும் ஒரே மாதிரியாக பார்க்கும் குணம் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம்.
தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம்.
பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். கலைத்துறயினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.
அரசியல்துறையினருக்கு உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று மஹாலக்ஷிமியை மல்லிகை மலரை அர்ப்பணித்து வழிபட்டு வலம் வரவும்.
{pagination-pagination}
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சாதுபோல் இருந்து சாதுரியமாக காய்களை நகர்த்தக்கூடிய குணம் கொண்ட ஏழாம் என் அன்பர்களே, நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள். இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நட்புகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அரசியல்துறையினருக்கு திடீர் பணதேவை உண்டாகலாம். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று தேங்காய் மாலை அர்ப்பணித்து வழிபடவும்.
{pagination-pagination}
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தானம் கேட்டு வந்தவர்களுக்கு தானம கொடுத்து உபசரிக்கும் குணம் கொண்ட எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்.
காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.
கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று நெய்தீபம் ஏற்றி வலம் வாருங்கள்.
{pagination-pagination}
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.
பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் அருகிலிருக்கும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, 9 முறை வலம் வரவும்.