திருமலையில் நாளை பக்தர்கள் குறை கேட்பு

திருமலையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருமலையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 திருமலையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
 இதில், பக்தர்கள் தேவஸ்தான செயல் அதிகாரியைத் தொடர்பு கொண்டு, திருமலையில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், குறைகளைத் தெரிவிப்பது வழக்கம். அதன்படி, இம்மாதத்துக்கான குறை கேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காலை 8.30 முதல் 9.30 மணி வரை தொலைபேசி மூலம் நடைபெற உள்ளது. 
இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். நிகழ்ச்சியை தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா தொலைக்காட்சியில் தேவஸ்தானம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மேலும், அன்று காலை 10 மணிக்கு ஜூலை மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com