ஏழுமலையானை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன் குடும்பத்தினருடன் தரிசித்தார்.
திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடு செய்தளித்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர் தன் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை காலையில் பூராபிஷேக சேவையில் ஏழுமலையானை வழிபட்டார். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கும், குடும்பத்தினருக்கும் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்வித்து, ஏழுமலையான் பிரசாதம், சுவாமி படம் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.