பண்ருட்டி அருகே திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் சித்திரை சதய விழாவின் 5-ம் நாள் உத்ஸவம் திலகவதியார் நந்தவனத்தில் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, திருநாவுக்கரசருக்கு அரிசி மாவு, அபிஷேக தூள், மஞ்சள் தூள், பஞ்சகவ்யம், ரஸப் பஞ்சாமிர்தம், பழப் பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், நெய், கரும்புச் சாறு, பழ வகைகள், விபூதி, இளநீர், தேன், பன்னீர், சந்தனம், கலச நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.