திருமலையில் இந்த மாதத்துக்கான இலவச முதன்மை தரிசன தேதிகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம் வழங்கிட அனுமதியளிக்கிறது. அதன்படி வரும் ஆக.13 மற்றும் ஆக. 27-ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆக. 14 மற்றும் ஆக. 28-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.