அத்திவரதர் பெருவிழாவின் 40-ம் நாளான இன்று இளம் ஆரஞ்சு பட்டாடையில் நீல நிற ஜரிகை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி 31 நாட்கள் சயன கோலத்திலும், 9 நாட்களாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதரை தரிசிக்கப் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த 39 நாட்களில் 73 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.
அத்திகிரி அருளாளனை இன்னும் 7 நாட்களே தரிசிக்கமுடியும் என்பதால், பக்தர்கள் நீண்ட வரிசையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதருக்கு அகமவிதிப்படி பூஜைகள் நடைபெறுவதால், ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.