நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் இன்று பவித்ரோத்ஸவ திருவிழா நடைபெறுகிறது.
கோயில் பூஜைகளில் அறியாமல் நிகழும் குறைபாடுகளுக்கு பரிட்சாத்தியமாக ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பெருஞ்சாந்தி விழாவே பவித்ரோத்ஸவம். இவ்விழா, நெல்லையப்பர் கோயிலில் இன்று விமரிசையாக நடைபெறுகிறது.
இன்று இரவு 8 மணிக்கு அருள்மிகு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், ஸ்ரீ சுப்பிரமணியர் மரமயில் வாகனத்திலும், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும் திருநெல்வேலி நகரத்தின் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.