அத்திவரதர் தரிசனம் இன்று 3 மணி நேரம் ரத்து!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு..
அத்திவரதர் தரிசனம் இன்று 3 மணி நேரம் ரத்து!


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு அத்திவரதர் தரிசனம் 3 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமையான இன்று மாலை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கவுள்ளது. 

கருட சேவையை முன்னிட்டு கிழக்கு கோபுரவாசல் பகல் 12 மணிக்கு மூடப்படுகிறது. 12 மணிக்கு முன்னர் கோயிலுக்குள் இருப்பவர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். மாலை 4 மணியிலிருந்து ஆடி கருட சேவை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. 

வெள்ளிக்கிழமை (ஆக. 16) மாலை  4 மணியுடன் பொதுதரிசனம் உள்பட வி.ஐ.பி, வி.வி.ஐ.பி.தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 17-ம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார்.

அத்திவரதரை தரிசிப்பதற்கான காலநீட்டிப்பு  எதுவும் கிடையாது. திருக்கோயில் மூலவரை வரும் 18-ம் தேதியிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com