இந்த வாரம் (ஆக.16 - 22) எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 16 - ஏப்ரல் 22) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் (ஆக.16 - 22) எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 16 - ஏப்ரல் 22) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்படும். மனஉறுதியால் அவர்ளைத் தகர்த்து எறிவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் தருவதோ வாக்கு கொடுப்பதோ கூடாது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ளவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க வேண்டாம். 

வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும். தேவைக்கு ஏற்ப சரக்குகளை வாங்கி வியாபாரம் செய்யவும். விவசாயிகள் தங்களது மகசூலைப் பெருக்க புதிய தானியங்களைப் பயிரிடவும்.  

அரசியல்வாதிகள் வெற்றிகளை குறைவாகவும் தோல்விகளை அதிகமாகவும் சந்திக்க நேரிடும். திட்டங்களை பொறுமையாக செயல்படுத்துங்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். வெளிவிளையாட்டுகளின்போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரியவழிபாடும் சிவபெருமான் வழிபாடும் நலம் சேர்க்கும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உங்களின் ஆசைகள் நிறைவேறும். கடினமான உழைப்புக்கு பிறகு வெற்றி வந்தடையும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். வசீகரப் பேச்சின் மூலம் மற்றவர்களைக் கவருவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவியுடன் மட்டுமே செயல்கள் வெற்றிகரமாகும். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக அமையும். வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். உழைப்புக்கு ஏற்றவாறு பலன்களை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகளின் திட்டங்கள் நிறைவேறும். மாற்றுக்கட்சிக்காரர்களும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றிபெறும். இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் அதிக கவனத்துடன் பொறுப்புடன் ஈடுபடவும்.

பரிகாரம்:  திங்களன்று கணேசரை அருகம்புல் சாற்றியும், புதனன்று நந்தகோபரையும் வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 18.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நிலவி வரும் குழப்பங்களும் சிக்கல்களும் விலகி ஒற்றுமை ஓங்கும். உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். பணவிரயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகளும் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். தொழிலை விரிவு படுத்தி வியாபாரத்தைப் பெருக்கவும். விவசாயிகளுக்கு லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். கால்நடை, பால்வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனை அடைவார்கள். 

அரசியல்வாதிகளைத் தேடி  புதிய பதவிகள் வந்து சேரும். தொண்டர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான காலமாகும். முயற்சிகள் வெற்றியாக மாறும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் உள்ள ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள்.

பரிகாரம்:  குலதெய்வ பிரார்த்தனையும் அம்பாளுக்கு மலர் சாற்றி வணங்குதலும் நலம். 

அனுகூலமான தினங்கள்: 17, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். உங்கள் நம்பிக்கைகள் பலப்படும். மனச்சோர்வுக்கு ஆளாகாமல் உழைப்பீர்கள். தேக ஆரோக்கியம் பலப்படும். முடிவு எடுக்காமல் இருந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பார்கள். பணவரவுக்கும் தடைகள் வராது. வியாபாரிகள் பல யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள். புதிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் கொள்முதல் லாபத்தை அள்ளுவார்கள். உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சியில் உயர் பதவிகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மன நிம்மதி அடைவார்கள்.  

பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் அனுகூலமான நிலைமை தென்படும். மதிப்பெண்கள் அதிகரிக்கும். 

பரிகாரம்: தினமும் ராம பக்த அனுமனை "ராம் ராம்' என்று ஜபித்து வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 19. 

சந்திராஷ்டமம்:  16, 17.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களுக்கு ஆளாவீர்கள். உடல் சோர்வடையும். உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். உடன்பிறந்தோர் வகையில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாகச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தையும் முடிக்க ஆற்றல் உண்டாகும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். துணிந்து முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகள் கொள் முதல் லாபத்தை அள்ளுவார்கள். கால்நடைகளை வாங்கி உபரி வருமானத்தைப் பெருக்கவும். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் தடைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றியடைவார்கள். கட்சி மேலிடம் உரிய பதவிகளைக் கொடுக்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடிப்பார்கள். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். 

பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். மாணவமணிகளுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். போதிய பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்கள் பெறவும். 

பரிகாரம்:  சனியன்று வேங்கடேசப்பெருமாளை தரிசித்து நலம் பெறுங்கள். அனுகூலமான தினங்கள்: 16, 21. சந்திராஷ்டமம்:  18, 19, 20.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து இன்பம் பெருகும். மதிப்பு மரியாதை உயரும். ராசியாதிபதி பாக்கியாதிபதியுடன் கூடி ஆட்சி பெற்றிருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்து பொருளாதார வளம் உண்டாகும். கவலைகளை மறந்து செயலாற்றுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிர்பாராத பதவி உயர்வுகள் தேடி வரும். அலுவலகத்தில் கோரிக்கைகள் நிறைவேறி சலுகைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைச் செயல்படுத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து, கொள்முதல் லாபம் தொடரும். பாசன வசதிகளுக்கு செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலினால் கவலை அடைவீர்கள். ஆனாலும் தொண்டர்களைச் சாந்தப்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு இது குதூகலமான காலமாகும். புதிய ஒப்பந்தங்கள் லாபம் தருவனவாக அமையும். 

பெண்மணிகள் தம் கணவருடன் நேசமாகப் பழகி பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளவும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறிய தேக்க நிலை உண்டாகும். விளையாட்டில் கவனத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்:  சனியன்று சனீஸ்வரருக்கு தீபமேற்றி வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 19. 

சந்திராஷ்டமம்:  21, 22.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். ஆற்றல் பெருகும். திட்டமிட்ட செயல்கள் வெற்றி அடையும். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவர். புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். விவசாயிகளுக்கு தடைகளும் எதிர்ப்புகளும் நீங்கும். வாய்க்கால் வரப்பு விவகாரங்களில் சாதகமான முடிவைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பயணங்களால் நன்மை அடைவார்கள். தொண்டர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வார்கள். 

பெண்மணிகளுக்கு நல்லது, கெட்டது கலந்து வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வார்கள். விளையாட்டில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள்.

பரிகாரம்:  வெள்ளியன்று தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 19. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வரவுக்குத் தகுந்த செலவுகள் ஏற்படும். திறமையான அணுகுமுறையிலும் யோகா, தியானத்தாலும் மனச்சுமையை குறைத்துக் கொண்டு செயலாற்றுவீர்கள். நண்பர்களின் உதவி உண்டு. வழக்குகளில் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைத் திட்டமிட்டு செய்து முடிப்பார்கள். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள். சிலர் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரலாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். 

அரசியல்வாதிகள் வீண்விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கொடுத்த பொறுப்புகளைக் கவனமுடன் முடிக்கவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கும் ஆசைகளைக் குறைத்துக் கொள்ளவும். கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். 

மாணவமணிகள் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானங்களைச் செய்து ஆற்றலைக் கூட்டிக் கொள்ளவும்.

பரிகாரம்:  ராகு கால வேளைகளில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 20. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகளையும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உட்கட்சி விவகாரங்களில் அதிகம் தலை நுழைக்க வேண்டாம். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகவே இருக்கும். உற்றார் உறவினர்களால் நன்மை உண்டாகும். மாணவமணிகள் உற்சாகத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

பரிகாரம்: சனியன்று நவக்கிரகங்கள், சனீஸ்வர பகவானை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 19.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத ஸ்பெகுலேஷன் வகையில் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு படிப்படியாகக் குறையும். பணவரவு கூடும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடித்து சாதனை படைப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேலிடத்தின் பாராட்டைப் பெறுவார்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாகவே இருக்கும். 

பெண்மணிகள் உறவினர்கள் மூலம் உதவிகளைப் பெறுவார்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும். மாணவமணிகள் கூடுதலான மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்:  பார்வதி பரமேஸ்வரரை தரிசனம் செய்து பலன்களை இரட்டிப்பாக பெறவும். அனுகூலமான தினங்கள்: 16,  21. சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். இருப்பினும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் நன்கு யோசிக்கவும். உறவினர்கள் உதவியாக இருக்க மாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்தவும், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். விவசாயிகள் வருமானத்தைக் கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். செலவுகள் செய்து பயிரிடுவதைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்தவும். குறிப்பாக, மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் உடல்நிலையை சரியாக கவனிக்கவும்.

பரிகாரம்: குலதெய்வத்தையும் பழனி பாலதண்டாயுதபாணியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 22. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நிதானத்துடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தொழிலில் எதிர்பார்ப்புகள் கூடும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் சுமுகமாக இருக்க மாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் ஏற்படும். வியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச்சென்று, 

வியாபாரத்தைப் பெருக்கவும். புதிய முதலீடுகள் செய்வதற்கு இது உகந்த நேரமல்ல. விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சந்தோஷமாக முடியும். 

அரசியல்வாதிகள் எதிர்கட்சியினரிடம் உஷாராக இருக்கவும். கட்சி மேலிடத்திடம் கவனமாக நடந்து கொள்ளவும். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடலும் மனமும் பலப்படும். ஆன்மிகத்தில் ஆர்வம் பெருகும். மாணவமணிகள் பாடங்களை ஆழ்ந்து கவனத்துடன் படிக்கவும். விளையாட்டுகளிலும் வெற்றி பெற விடாமுயற்சி செய்யவும்.

பரிகாரம்:  ஞாயிறன்று சரபேஸ்வரரை வழிபடவும். 108 முறை " ஸ்ரீராமஜெயம்' எழுதவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 22. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com