இந்த வாரம் (ஆக.30 - செப்.5) எந்த ராசிக்காரர்களுக்கு தனவரவு அதிகரிக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 6) பலன்களை தினமணி..
இந்த வாரம் (ஆக.30 - செப்.5) எந்த ராசிக்காரர்களுக்கு தனவரவு அதிகரிக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 6) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உற்சாகமான காலகட்டமிது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வீட்டை மாற்றுவார்கள். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அவர்களிடம் முக்கியமான வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடியும். சரளமான பணவசதிகள் ஏற்படும். விவசாயத்தில் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். 

அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை நாடிச் செல்வார்கள். எதிர்கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். நண்பர்களை அனுசரித்துச் செல்லவும். 

கலைத்துறையினர் நிதானத்துடனும் கவனத்துடனும் நடந்து கொண்டால் எதிர்பார்த்த வெற்றி இலக்கை எட்டலாம். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவார்கள். மாணவமணிகள் சோம்பேறித்தனத்திற்கு இடம் தராமல் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். 

பரிகாரம்: விநாயகருக்கும் நந்தீஸ்வரருக்கும் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 31.

சந்திராஷ்டமம்: 5.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களில் நிலவி வந்த தடைகளைத்தாண்டிவெற்றி பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செ ன்று வருவீர்கள். தீயவர்களின் சேர்க்கையைத் தவிர்த்து விட்டால் குழப்பங்களில் இருந்து தப்பிக்கலாம்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் உதவியோடு சில முக்கியமான வேலைகளையும் முடிப்பீர்கள். வியாபாரிகள் நன்கு ஆலோசித்துக் கூடுதல் முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளை அதிகம் நம்பவேண்டாம். விவசாயிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். வாய்க்கால் வரப்பு பிரச்னைகளில் கவனம் தேவை.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம். எதையும் தீர ஆலோசித்துச் செய்யவும். எதிரிகளின் பலம் அதிகரிப்பதால் கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

பரிகாரம்: பெருமாளை புதனன்று தரிசித்து நலம்கூடப் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 30, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் கவலைகளை மறந்து செயலாற்றுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து  நடந்துகொள்ளவும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் பதவி உயர்வுகள் கிடைக்கும். அனைவரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். வியாபாரிகளுக்கும் போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். 

விவசாயிகள் கொள்முதலில் லாபத்தை அள்ளுவார்கள். கால்நடைகளை வாங்கி, உபரி வருமானத்தைப் 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். புதிய பதவிகள் வரும். எதிரிகள் ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். தாய்வழி உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவமணிகளுக்கு பெற்றோர் உதவிகரமாக இருப்பார்கள். ஆசிரியர் சொற்படி நடக்கவும்.

பரிகாரம்: தினமும் ராமபக்த அனுமனை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 31, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்களின் பேச்சு மற்றும் செயல்களில் ஒரு மிடுக்கு தெரியும். செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பயணங்கள் பலன் தரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படும். மேலதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் முயற்சிகளில் பின்வாங்காமல் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தையும் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். மகசூல் நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய படைப்புகளை உருவாக்க ஆர்வம் அதிகரிக்கும். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். 

பெண்மணிகளுக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவமணிகள் எதிர்பாராத உதவிகளைப் பெறுவார்கள். போதிய பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் வேங்கடேசப் பெருமாளை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 2. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் முயற்சிகள் யாவும் நிறைவேறும் காலகட்டமிது. குடும்பத்தில் உற்சாகம் தாண்டவமாடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உடன்பிறந்தோர் வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மதிப்பு மரியாதை உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களை கூற வேண்டாம். வியாபாரிகளுக்கு மனதில் குழப்பங்கள் சூழும். அவசியமான செலவுகளுக்குக் கடன் வாங்க நேரிடும். விவசாயிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவார்கள். புதிய குத்தகைகளைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் நட்பைப் பெறுவார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகவே முடியும். கலைத்துறையினர் திறமைக்கு ஏற்ற வரவேற்புகளைப் பெறுவார்கள். பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சற்று சிரமம் ஏற்படும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். மாணவமணிகளுக்கு விளையாட்டுகளில் கவனமாக ஈடுபட வேண்டும். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: அம்பாளையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்:  2, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நல்லோர்களின் தொடர்பு ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டாகும். சிறு தொல்லைகள் கொடுத்து வந்தவர்கள் அடங்கி விடுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். மேலதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக அமையும். கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும்.

அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் அலட்சியப்படுத்தும். அதனால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு பணியாற்றினால் சிரமங்களிலிருந்து தப்பிக்கலாம். 
கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். சமூகத்தின் பெயரும் புகழும் வளரும். 

பெண்மணிகள் சிறிய விபத்துக்குள்ளாக நேரிடும். அதனால் எச்சரிக்கையுடன் இருக்கவும். கணவருடன் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. 

பரிகாரம்:  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் யாவும் திடீரென்று நடந்து, உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.  பிறருக்கு வாக்கு கொடுப்பதையோ, முன்ஜாமீன் போடுவதையோ தவிர்த்தல் நன்று. தந்தை வழி உறவில் சிறு மனக்கசப்பு உருவாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் சற்று அதிக கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். அதனால் புதிய நிலங்களை குத்தகைக்கு எடுக்க வேண்டாம். 

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றி கொடுக்கும். அவசரம் அவசரமாகச் செய்யும் கட்சி வேலைகளில் இடையூறுகள் உண்டாகும். 
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். வருமானமும் நன்றாக இருக்கும். பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சில்லரைச் செலவுகள் கூடும் என்பதால் சேமிப்புகளில் கவனம் தேவை. மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவார்கள்.  

பரிகாரம்: செவ்வாயன்று சிங்காரவேலன் சந்நிதியில் கந்தசஷ்டி பாராயணம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். செல்வாக்கு உயரும். நீண்டகால எண்ணங்களில் ஒன்று ஈடேறும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து சுமுகமான உறவைத் தக்க வைத்துக் கொள்வார்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் சக ஊழியர்களின் ஆதரவுடன் சில அரிய சாதனைகளைச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளவும். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்து பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினர்புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். 

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். கணவரிடம் அன்போடு பழகுவார்கள். மாணவமணிகள் எதிர்வரும் இடையூறுகளைச் சமாளித்தால் வெற்றி பெறலாம். உடற்பயிற்சி செய்தல் நலம்.

பரிகாரம்: திங்களன்று சிவபெருமானையும் துர்க்கையையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். மதிப்பு மரியாதை உயரும். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம். மேலும் அவதூறான வதந்திகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன் செய்யவும். மேலதிகாரிகள் அவர்களிடம் சற்று கடுமையாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக முடியும். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். 

அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். கலைத்துறையினர் முன்னேற்றங்களைக் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்களிடம் கனிவாகப் பழகுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் சாதிக்க அதிகமாக உழைக்கவும். பெற்றோர்களின் ஆதரவு உங்களை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும். 

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  1, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவு இருக்காது. சற்று குழப்பமான சூழ்நிலையும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி சொத்துகளில் இருந்த வில்லங்கம் விலகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களின் பாராட்டுகளையும் பெறுவார்கள். வியாபாரிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும்.  வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும்.  விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி, வருமானம் பெருகும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். உங்கள் பணியாற்றும் திறனை, கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினருக்கு பட வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். கணவர் வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் செய்யும் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். 

பரிகாரம்:  கணேசரை வழிபட்டு சங்கடங்களைக் குறைத்துக் கொள்வீர்கள்.

அனுகூலமான தினங்கள்:  3, 4. 

சந்திராஷ்டமம்: 30, 31.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார வளம் பெருகும். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். புதிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவீர்கள். நெடுநாள்களாக ஒத்தி வைத்திருந்த யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். கால்நடைகளாலும் பலன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் முயற்சிக்கு ஏற்ற பதவி உயர்வுகளைப் பெறுவார்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாது கட்சிப்பணியாற்றுவதால் பெயரும் புகழும் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் முழுமையாகக் கிடைக்காது. 

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் நேர்த்தியுடன் ஈடுபடுவார்கள். பெற்றோரின் ஆதரவுண்டு.

பரிகாரம்: சனியன்று சனீஸ்வரபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  3, 5. 

சந்திராஷ்டமம்: 1, 2.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கவலைகளை மறந்து செலாற்றுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிராது. தொலைதூரத்திலிருந்து வரும் நற்செய்திகள் உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். பெரிய இடையூறுகள் ஏற்பட்டாலும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவார்கள். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகும். 

வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி விற்பனையும் அதிகரிக்கும். புதிய குத்தகைகளை எடுக்கும் எண்ணங்கள் மேலோங்கும். 

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவார்கள். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகு ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். 

பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தாருடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவமணிகள் கல்வியில் தேர்ச்சி பெற முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரமிது.

பரிகாரம்: "ராம் ராம்' என்று ஜபித்து ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  2, 5. 

சந்திராஷ்டமம்: 3, 4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com