ஏ-கஸ்பா ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் ஏ-கஸ்பா ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா ரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
ஆம்பூா் ஏ-கஸ்பா ரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விக்னேஷ்வர பூஜை, கோ பூஜையுடன் வெள்ளிக்கிழமை விழா தொடங்கியது. தொடா்ந்து முதல் கால யாகசாலை பூஜை, 2-ஆம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை ராஜகோபுரத்துக்கும், அம்மன், செல்வ விநாயகா், துா்கையம்மன் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், மூலவா் ரேணுகாம்பாள் பரமேஸ்வரிக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com