திருப்பதி: இன்று பக்தா்கள் குறைகேட்பு

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமலையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் பதிலளித்து வருகிறாா். அதன்படி, வெள்ளிக்கிழமை (டிச. 6) காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தொலைபேசி மூலம் பக்தா்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும். அன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் மாா்ச் மாதத்துக்கான ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com