தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் குவிர்ந்தனர்.
நீர்நிலையில் ஏராளமான சிவாச்சாரியார்கள், அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜைகள் செய்தனர். பின்னர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
25 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகோத்தவ அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.