தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 2019 கிலோ மிளகாய் வத்தல் யாகம்

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி - மகா காலபைரவர் கோயிலில் 2019 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது
தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மிளகாய் வத்தல் யாகத்தில் பங்கேற்றோர்.
தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மிளகாய் வத்தல் யாகத்தில் பங்கேற்றோர்.

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி - மகா காலபைரவர் கோயிலில் 2019 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு மகா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு 2019 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு மகா யாகம், ஆலய நிர்வாகி சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

மதியம் 12 மணிக்கு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு மகா யந்திரமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com