குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ம் தேதி தொடங்குகிறது.
தேவார பாராயணம், தொடர்ந்து பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், யாகசாலை பூஜையும் தொடங்குகிறது.
9-ம் தேதி 3-ம் கால யாகசாலை பூஜையும், 10-ம் தேதி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
11-ம் தேதி யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 9.45 மணி முதல்10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெறலாம்.