சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு மற்றும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடை பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து தீபாராதனை நடத்துவார்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17-ம்
தேதி இரவு 10.30 மணித்துஅத்தாழபூஜைக்குபின் அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படுகிறது.