சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்,12-ல் நடை திறப்பு 

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. 
சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்,12-ல் நடை திறப்பு 

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு மற்றும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடை பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து தீபாராதனை நடத்துவார். 

மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோயில் நடை  திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து  5 நாட்கள் நடைபெறும் சிறப்பு  பூஜைகளுக்கு பின் 17-ம் 

தேதி  இரவு 10.30 மணித்துஅத்தாழபூஜைக்குபின் அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com