திருமலையில் வரும் 19ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது.
அதன்படி வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வர உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் அன்று குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.