ஏழுமலையானை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.
அவர் திங்கள்கிழமை மாலை ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.