திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனத்தை வழங்கி வருகிறது.
அந்தவகையில், பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள் மற்றும் பிப். 20-ம் தேதி கைக் குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது.
வரும் பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.
அதேபோல் பிப். 20-ம் தேதி காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.