இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!!

12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.15 - பிப்.21) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் ..
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!!

12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.15 - பிப்.21) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகைமுதல் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். பெற்றோர் வழியில் திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெறும். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்பார்த்த ஊதியத்தைப் பெறுவீர்கள். 

வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு,  வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதிய முதலீகளில் ஈடுபடலாம். விவசாயிகளுக்கு தடைகளும் எதிர்ப்புகளும் நீங்கும். கொள்முதல் லாபங்கள் அதிகரிக்கும். கால்நடைகளை மிக்க கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின்  பாராட்டுகளைப் பெறுவார்கள். பயணங்களால் நன்மை அடைவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வார்கள். 

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்லதும் கெட்டதும் கலந்து வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 

மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வார்கள். விளையாட்டிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 15, 16.  சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பெயரும் புகழும் உயரும். இடையூறுகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சுபச்செய்திகளால் மனம் நிம்மதி அடையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மன பாரம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். செயல்களை ஆர்வத்துடன் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். சிக்கல்கள் விலகி பொருளாதாரம் உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை இருக்கும். 

அரசியல்வாதிகள் புதிய பதவியில் அமர்வர். இதன்மூலம் மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்புகளைப் பெறுவர். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வர். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உல்லாச பயண வாய்ப்புகள் ஏற்படும். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவுடன் விளையாட்டில் ஈடுபடுவர்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். இருப்பினும் மறைமுக எதிர்ப்பையும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாய  உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.  

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் உற்சாகத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.  

பரிகாரம்: பெசன்ட நகர் ரத்தின கிரீஸ்வரரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 15, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பணவரவு சீராக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண முடியாது. யோசிக்காமல் வாக்கு கொடுப்பது, ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு  வேலைப்பளு அதிகரிக்கும். வேலைகளில் குறை காணக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகளின் புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பார்கள். கால்நடைகளுக்காகவும் பூச்சி மருந்துக்காவும் செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் எதிரிகளின்  தொல்லைகளுக்கு ஆளாவார்கள். கட்சி மேலிடம்  உங்கள் பேச்சைக் கண்காணிக்கும். கலைத்துறையினர் நன்கு பரிசீலித்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். 

பெண்மணிகள் நன்மதிப்பு பெறுவார்கள். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவார்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 18.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) 

மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் கவனமாக இருக்கவும். எனினும் பொறுமையாக செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் நன்கு யோசிக்கவும். உறவினர்கள் உதவிகரமாக இருக்கமாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்தவும்.  கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். விவசாயிகள் வருமானத்தைக் கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். அதிகச் செலவுகள் செய்து பயிரிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்தவும். குறிப்பாக, மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு கணவருடனான ஒற்றுமை சீராகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். 

மாணவமணிகளுக்கு  வெயிலில் தோல் நோய்கள் உண்டாகலாம். செயல்களை உற்சாகத்துடன்  செய்வீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 19.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை உயரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இருப்பினும் அலைச்சலும் திரிச்சலும் உண்டாகும். வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். பெற்றோர் வழியில் சோதனைகள் உண்டாகலாம்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். 

வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய  நேரிடலாம். கொடுக்கல் வாங்கல்கள் மந்தமாக இருப்பதால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து காணப்படும். பழைய குத்தகைகளைச் சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு.

அரசியல்வாதிகள் எதிர்கட்சியினரிடம் உஷாராக இருக்கவும். கட்சி மேலிடத்திடம் கவனமாக நடந்துகொள்ளவும். கலைத்துறையினர் ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில்  முடித்துக் கொடுத்தாலும் பணவரவுக்கு தாமதமாகும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில்  சாதகமான நிலை தென்படும். பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவ
மணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். 

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை  வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 20.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

செயல்களில் நிலவி வந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். தீயவர்களின் சேர்க்கையை தவிர்த்துவிட்டால் குழப்பங்களில் இருந்து தப்பிக்கலாம்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் உதவியோடு சில முக்கியமான வேலைகளையும் முடிப்பீர்கள். வியாபாரிகள் நன்கு ஆலோசித்துக் கூடுதல் முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். வாய்க்கால் வரப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆகவே எதையும்  தீர ஆலோசித்துச் செய்யவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளின்போது காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

பரிகாரம்: வளசரவாக்கம் ஸ்ரீவேங்கட சுப்ரமணியரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 15, 19.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திட்டமிட்ட வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சுபச்செய்தி ஒன்று தேடி வரும். இருப்பினும் பேச்சில் கவனம் தேவை. உறவினர்களின் அலட்சியப்போக்கு மன வேதனையை கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஏற்றவாறு உழைக்க நேரிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு தடைபடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். ஆனாலும் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும். கூட்டாளிகளின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த வருமானம் வராமல் போகும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும்.  தொண்டர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கும். 

கலைத்துறையினருக்கு  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு இல்லத்தில் நிலவும் அமைதியால் உற்சாகம் அடையலாம். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும்.

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 20.  

சந்திராஷ்டமம்: 15,16.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கவலைகளை மறந்து செயலாற்றுங்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் பதவி  உயர்வுகள் கிடைக்கும். அனைவரும்  உதவ முன் வருவார்கள். வியாபாரிகளுக்கு போட்டிகளால்  பாதிப்புகள் ஏற்படாது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தை அள்ளுவார்கள். கால்நடைகளை வாங்கி உபரி வருமானத்தைப் பெருக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். புதிய பதவிகளும் கிடைக்கும். எதிரிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். தாய்வழி உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவமணிகள் நண்பர்களின் உதவிகளைப் பெறுவார்கள். 

பரிகாரம்: தினமும் ராமபக்த அனுமனை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 21. 

சந்திராஷ்டமம்: 17, 18.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நினைத்த செயல்கள் அனைத்தும் சாதகமாக முடிவடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.  வருமானம் அதிகரிக்கும். ஆன்மிக பலம் உயரும். வாகனங்கள் வாங்க இது உகந்த காலமாகும். உறவினர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே நடைபெறும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். 

விவசாயிகள் கொள்முதல் லாபத்தை அள்ளுவார்கள். வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். விவசாயக் கூலிகளை கௌரவத்தோடு நடத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். இருப்பினும் அவர்களைச் சீண்டிப்பார்க்க வேண்டாம். சமூகத்தில் கௌரவமான பதவிகளைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். அவர்களின் திறமைகள் பளிச்சிடும். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். சேமிப்பைக் கூட்டிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். 

மாணவமணிகள் விளையாடும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும்.

பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 21.  

சந்திராஷ்டமம்: 19, 20.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உற்சாகம் தாண்டவமாடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உடன்பிறந்தோர் வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாகனங்களில் செல்வோருக்கு எச்சரிக்கை தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.  வியாபாரிகளுக்கு மனதில் குழப்பங்கள் சூழும். அவசியமான செலவுகளுக்குக் கடன் வாங்க நேரிடும். விவசாயிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவார்கள். இருப்பினும் புதிய குத்தகைகளைப் பெறவேண்டாம்.

அரசியல்வாதிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகவே முடியும். கலைத்துறையினர் திறமைக்கு ஏற்ற வரவேற்புகளைப் பெறுவார்கள். பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சற்று சிரமம் ஏற்படும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.  மாணவமணிகள் விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடவும். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தேவையில்லாத அலைச்சலையும் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவியினால் அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். பணவரவு சீராகவே இருக்கும். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு கொள்முதலில் சுமாரான லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களை நாடிச் செல்லவும். விவசாயிகளுக்கு வருமானம் 
திருப்திகரமாக இருக்கும். புதிய கால்நடைகளை வாங்கிப் பலன் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை  நிலவுவதால் அவர்களின் கண்களில் படாமல் அமைதியாகச் செல்லவும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வார்கள். 

பெண்மணிகள் கணவரிடம்  ஒற்றுமையோடு பழகுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள். ஓய்வு எடுத்துக்கொண்டு செயல்பட்டால் திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரியபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18,  21.  

சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com