காளஹஸ்தீஸ்வரர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக இக்கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வரும் 27ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் கோயிலில் நடைபெற்று வருகின்றன. மேலும் பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகனச் சேவை விவரங்கள் அடங்கிய சுவரொட்டியை கோயில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டனர். பிரம்மோற்சவ வாகனச் சேவை விவரம்: