திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உறையூரில் பிரசித்தி பெற்ற பஞ்சவர்ண சுவாமி கோயிலில் புதிதாக செய்யப்பட்ட பெரிய தேரில் இந்தாண்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் கும்பங்கள் வைக்கப்பட்டன. நேற்று காலை 9.30 மணியளவில் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திராளன பக்தர்கள் கலந்துகொண்டு நமசிவாய, நமசிவாய என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.