திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் விரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் வரும் 24ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இதை முன்னிட்டு, கோயில் முழுவதையும் சுத்தம் செய்யும் சடங்கான கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடத்தப்பட்டன.
அதன் பின் கோயில் முழுவதும் சாத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, வாயில்களில் புதிய திரைச்சீலைகள் அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.