
கபிலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை காலை பூத வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்த காமாட்சி சமேத சோமாஸ்கந்தமூர்த்தி. (வலது) இரவு சிம்ம வாகனத்தில் வலம் வந்த கபிலேஸ்வரர்.
திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் பகுதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான புதன்கிழமை காலை பூத வாகனத்தில் காமாட்சி சமேத சோமாஸ்கந்தமூர்த்தி மாடவீதியில் வலம் வந்தார்.
இக்கோயிலில் திங்கள்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. புதன்கிழமை காலை கபிலேஸ்வரரும், காமாட்சி அம்மனும் சோமாஸ்கந்தமூர்த்தியாக பூத வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தனர்.
மதியம் 12 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் கபிலேஸ்வரர், உடன் பல்லக்கில் காமாட்சி அம்மனும் மாடவீதியில் வலம் வந்தனர். மாடவீதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனர்.