ஏழுமலையானை ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரவீண்குமார் தன் குடும்பத்தினருடன் வழிபட்டார்.
ஆந்திர மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பிரவீண்குமார் தன் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். அவரை வரவேற்று தேவஸ்தான அதிகாரிகள் தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் ஆகியவற்றைச் செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர்கள் திங்கள்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்களை வழங்கினர். பின் அவர் காளஹஸ்தி சென்று காளஹஸ்தீஸ்வரரையும், ஞானபிரசூனாம்பிகையையும் வழிபட்டார்.
ரஜினிகாந்த் குடும்பத்தினர்...
ஏழுமலையானை நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் திங்கள்கிழமை காலையில் வழிபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனது மகனுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தங்குமிடம், தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். திங்கள்
கிழமை காலையில் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்த அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்கள் வழங்கி, வேதபண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்வித்தனர்.