ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம் இன்று தொடங்கியுள்ளது.
மார்கழி எண்ணெய்க் காப்பு இன்று தொடங்கி ஜனவரி 15-ம் தேதி வரை இதை முன்னிட்டு தினமும் காலை 9.00 மணிக்கு ஆண்டாள் தங்க பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருள்கிறார்.
தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பட்டு எண்ணெய்க்காப்பு உற்சவத்தில் பங்கேற்கிறார். தை மாதப்பிறப்பான ஜனவரி 15 -ம் தேதி மணவாள மாமுனிகள் மங்களாசாசனம், ஜனவரி 16-ம் தேதி பெரியாழ்வார் சந்நிதியில் கணு வைபவம் நடைபெறுகிறது.