கும்பகோணம், ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கோமளவல்லி தாயார் சமேத - ஆராவமுத பெருமாள் ஆலயத்தில் ஸங்கரமண உற்ஸவ தொடக்கவிழா 7-1-2019 அன்று அதிகாலை (த்வஜாரோஹனம்) திருக்கொடியேற்றம் துவங்கியது.
இவ்விழாவில் 7.1.2019 முதல் தினசரி காலையில் 14-1-2019 வரை, பல்லாக்கில் ஸ்வாமி திருவீதி புறப்பாடும் (15 1-2019) தை முதல் நாளான அன்று காலை 7-30 மணிக்கு மேல் ரதாரோஹணம் - திருத்தேர்வடம் பிடித்தல் விழாவும், 16-1-2019 அன்று காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் , 7-1-2019 இரவு 8.00 மணிக்கு வெள்ளி இந்திர விமானம், 8-1-2018 வெள்ளி சூர்யப்ரபை, 9-1-19 வெள்ளி சேஷம், 10-1-19 வெள்ளி கருட சேவை, 11-1-19 வெள்ளி ஹனுமந்த, 12-1-19 வெள்ளி யானை, 13-1-19 பெருமாள் உபய நாச்சியார்களுடன் தங்கமங்களகிரியிலும்,14-1-19 குதிரை வாகனம் ஆகிய வாகனங்ளில் தினசரி ஸ்வாமி வீதியுலாவும், 15-1-2019 பகல் 12 மணிக்கு ஸ்ரீசக்கரபாணி ஆலய ஸ்வாமி, அருள்மிகு ஸ்ரீசக்கரத்தாழ்வார், இராமஸ்வாமி ஆலய ஸ்வாமி அருள்மிகு ஸ்ரீசக்கரவர்த்தித் திருமகன் ( இராமர் ) ஆகிய ஸ்வாமிகள் பொற்றாமரை திருக்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி விழாவும், அதனைத் தொடர்ந்து உத்ராயண வாயில் திறப்பும், மாலை முத்தரசம்பாடி புறப்பாடும் நடைபெற உள்ளது.
இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
குடந்தை ப.சரவணன் - 9443171383