கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் தை திருத்தேரோட்ட பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கும்பகோணம், ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கோமளவல்லி தாயார் சமேத - ஆராவமுத பெருமாள் ஆலயத்தில் ஸங்கரமண உற்ஸவ தொடக்கவிழா 7-1-2019 அன்று அதிகாலை (த்வஜாரோஹனம்)
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் தை திருத்தேரோட்ட பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கும்பகோணம், ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கோமளவல்லி தாயார் சமேத - ஆராவமுத பெருமாள் ஆலயத்தில் ஸங்கரமண உற்ஸவ தொடக்கவிழா 7-1-2019 அன்று அதிகாலை  (த்வஜாரோஹனம்) திருக்கொடியேற்றம் துவங்கியது.

இவ்விழாவில் 7.1.2019 முதல் தினசரி  காலையில் 14-1-2019 வரை, பல்லாக்கில் ஸ்வாமி திருவீதி புறப்பாடும்  (15 1-2019) தை முதல் நாளான அன்று காலை 7-30 மணிக்கு மேல் ரதாரோஹணம் - திருத்தேர்வடம் பிடித்தல் விழாவும், 16-1-2019 அன்று காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் , 7-1-2019  இரவு   8.00 மணிக்கு வெள்ளி  இந்திர  விமானம், 8-1-2018 வெள்ளி சூர்யப்ரபை, 9-1-19 வெள்ளி சேஷம், 10-1-19  வெள்ளி கருட சேவை, 11-1-19 வெள்ளி ஹனுமந்த, 12-1-19 வெள்ளி யானை, 13-1-19 பெருமாள் உபய நாச்சியார்களுடன் தங்கமங்களகிரியிலும்,14-1-19 குதிரை வாகனம் ஆகிய வாகனங்ளில் தினசரி ஸ்வாமி வீதியுலாவும், 15-1-2019 பகல் 12 மணிக்கு ஸ்ரீசக்கரபாணி ஆலய ஸ்வாமி, அருள்மிகு ஸ்ரீசக்கரத்தாழ்வார், இராமஸ்வாமி  ஆலய ஸ்வாமி அருள்மிகு ஸ்ரீசக்கரவர்த்தித் திருமகன் ( இராமர் ) ஆகிய ஸ்வாமிகள் பொற்றாமரை திருக்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி விழாவும், அதனைத் தொடர்ந்து உத்ராயண வாயில் திறப்பும்,  மாலை முத்தரசம்பாடி  புறப்பாடும்  நடைபெற உள்ளது.
   
இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோயில்  நிர்வாகத்தினர்  செய்து வருகிறார்கள். 

குடந்தை  ப.சரவணன் - 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com