சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. 

தைப்பூச திருவிழாவையொட்டி மாரியம்மன் 21-ம் தேதி கொள்ளிடம் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்று மாலை 3.30 மணி முதல் கோயில் நடை சாத்தப்படும். பின்னர் மறுநாள் வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com