ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் தைத்தேர் திருவிழாவின் 4-ம் நாளான நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வருகிறார்.
இன்று காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 17-ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 18-ம் தேதி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். 19-ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 20-ம் தேதி காலை நடைபெறுகிறது. 21-ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.